வேலைக்கு செல்வதற்காக தினமும் நான் செய்வது 20 நிமிடத்திலிருந்து 1 மணி நேர பயணம். பயணம் செய்யும் வாகனத்தை பொறுத்து நேரமும் மாறும். ஆனால் மாறாத ஒரு விஷயம் சென்னை traffic. அதுவும் இந்த கோடை காலத்தில் பேருந்து பயணம் என்பது இந்த நகரத்தில் நரக வேதனை. பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிக்கும் சொர்க்கம் என்பது ஜன்னலோர இருக்கையும் கிடக்கும் நேரத்தில் ஒரு சுகமான தூக்கமும்.
என்னை பொறுத்தவரை எனக்கு பேருந்து பயணத்தில் சுகம் என்பது ஓட்டுனர் இருக்கைக்கு எதிர்புறம் முதல் seat இல் அமர்வது. அதற்காகவே வேளச்சேரி பேருந்து நிலையத்தில் காத்திருந்து பஸ் ஏறுவேன். வேளச்சேரியில் இருந்து DMS செல்வதற்குள் சாலையில் நான் பார்க்கும் நாடகங்கள் பல பல. அதிலும் ஒவ்வொரு நாளும் சென்னை traffic சொல்லி முடியாது.
ஆனால் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முக்கிய காரணம் போக்குவரத்து விதி மீறலே. சாலை விதிகளை மதிக்காமல் செல்லவதை ஒரு சாகசம் போல் கருதும் ஒரு சாரார். சாலை விதிகளை மதித்து signal இல் நிற்பவன் கேட்க வேண்டிய கெட்ட வார்த்தைகள் பல பல. விதிகளை மதித்து நடப்பவன் பலரது ஏளன பார்வைக்கு உள்ளாவான் என்பதே இன்றைக்கு உள்ள நிதர்சனமான உண்மை.
இந்த விதி முறை மீறல்கள் செய்பவர்கள் யார் என்று பார்த்தல் யாரோ சட்டம் தெரியாத பாமரன் அல்ல. நன்கு படித்த முட்டாள்கள் தான். தங்கள் படித்து விட்டதாலேயே தங்களுக்கு எல்லாம் தெரிந்ததாகவும் தங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற மனோ பாவத்துடனும் அலையும் மாகானுபவர்கள் தான் இந்த சிங்கார சென்னையில் அதிகம். இதன் காரணமாகவே விபத்தும் போக்குவரத்து நெரிசலும் அதிகம்.
ஆட்டோவா அல்லது எமன் வாகனமா என்று நினைக்க தூண்டும் வகையில் அதை ஓட்டும் ஆட்டோ ஓட்டுனர்கள். இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் என்று சொல்வார்கள். அது நூறு சதவீதம் இவர்களுக்கு பொருந்தும். சவாரி இருந்தால் சாலையில் பறப்பதும் இல்லாவிடில் சாலையில் நினைத்த இடத்தில் நிற்பதும் ஊர்வதுமாக அவர்கள் ஏற்படுத்தும் நெரிசலும் சொல்லி முடியாது.
சாலையை கடக்க தனி இடமும் subway யும் இருந்தாலும் எந்த விதிமுறையும் இல்லாமல் சாலையை குறுக்கே கடந்து விபத்தை ஏற்படுத்தும் மக்கள் ஒரு காரணம்.
ஆனால் இது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. போக்குவரத்து விதி முறை மீறுவோரை க(த)ண்டிக்க வேண்டிய போக்குவரத்து காவலர் அதை செய்யாமல் ஒரு இளித்தவாயனை பிடித்து கையூட்டு பெறுவதிலேயே குறியாக இருப்பதும் ஒரு காரணம். அரசாங்கமும் ஒரு காரணம். குண்டும் குழியுமான சாலைகள். அதை சரிவர செப்பனிட முடியாத அல்லது விரும்பாத அரசாங்கம். அப்படியே மராமத்து வேலை செய்தாலும் நாலு நாளில் பூச்சிழந்து பல்லிளிக்கும் சாலைகள்.
இந்த கட்டுரையின் ஒரு நோக்கமே இதை படிக்கும் நூற்றில் ஒருவர் தன்னை திருத்தி கொண்டாலே போதும் என்பதே. முதலில் நாம் நம்மை சரிபடுத்துவோம். பிறகு அரசாங்கத்தையோ பிறரையோ சுட்டி காட்டுவோம். திருந்திய ஒரு தனி மனிதனால் ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும் .
ஆனால் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முக்கிய காரணம் போக்குவரத்து விதி மீறலே. சாலை விதிகளை மதிக்காமல் செல்லவதை ஒரு சாகசம் போல் கருதும் ஒரு சாரார். சாலை விதிகளை மதித்து signal இல் நிற்பவன் கேட்க வேண்டிய கெட்ட வார்த்தைகள் பல பல. விதிகளை மதித்து நடப்பவன் பலரது ஏளன பார்வைக்கு உள்ளாவான் என்பதே இன்றைக்கு உள்ள நிதர்சனமான உண்மை.
இந்த விதி முறை மீறல்கள் செய்பவர்கள் யார் என்று பார்த்தல் யாரோ சட்டம் தெரியாத பாமரன் அல்ல. நன்கு படித்த முட்டாள்கள் தான். தங்கள் படித்து விட்டதாலேயே தங்களுக்கு எல்லாம் தெரிந்ததாகவும் தங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற மனோ பாவத்துடனும் அலையும் மாகானுபவர்கள் தான் இந்த சிங்கார சென்னையில் அதிகம். இதன் காரணமாகவே விபத்தும் போக்குவரத்து நெரிசலும் அதிகம்.
ஆட்டோவா அல்லது எமன் வாகனமா என்று நினைக்க தூண்டும் வகையில் அதை ஓட்டும் ஆட்டோ ஓட்டுனர்கள். இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் என்று சொல்வார்கள். அது நூறு சதவீதம் இவர்களுக்கு பொருந்தும். சவாரி இருந்தால் சாலையில் பறப்பதும் இல்லாவிடில் சாலையில் நினைத்த இடத்தில் நிற்பதும் ஊர்வதுமாக அவர்கள் ஏற்படுத்தும் நெரிசலும் சொல்லி முடியாது.
சாலையை கடக்க தனி இடமும் subway யும் இருந்தாலும் எந்த விதிமுறையும் இல்லாமல் சாலையை குறுக்கே கடந்து விபத்தை ஏற்படுத்தும் மக்கள் ஒரு காரணம்.
ஆனால் இது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. போக்குவரத்து விதி முறை மீறுவோரை க(த)ண்டிக்க வேண்டிய போக்குவரத்து காவலர் அதை செய்யாமல் ஒரு இளித்தவாயனை பிடித்து கையூட்டு பெறுவதிலேயே குறியாக இருப்பதும் ஒரு காரணம். அரசாங்கமும் ஒரு காரணம். குண்டும் குழியுமான சாலைகள். அதை சரிவர செப்பனிட முடியாத அல்லது விரும்பாத அரசாங்கம். அப்படியே மராமத்து வேலை செய்தாலும் நாலு நாளில் பூச்சிழந்து பல்லிளிக்கும் சாலைகள்.
இந்த கட்டுரையின் ஒரு நோக்கமே இதை படிக்கும் நூற்றில் ஒருவர் தன்னை திருத்தி கொண்டாலே போதும் என்பதே. முதலில் நாம் நம்மை சரிபடுத்துவோம். பிறகு அரசாங்கத்தையோ பிறரையோ சுட்டி காட்டுவோம். திருந்திய ஒரு தனி மனிதனால் ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும் .


No comments:
Post a Comment